Saturday, October 3, 2009

பிட்டு - 67

1. எப்போ பார்த்தாலும் எல்லா நகையையும் போட்டுக்கிட்டு இருக்கியே, ஏன்?

எல்லாம் என் புருஷனுக்காகத்தான்

நகையோடதான் இருக்கணும்னு சொல்லுவாரா ?

நீ வேற. .. வீட்ல வெச்சிருந்தா அவர் அடகுக் கடையில கொண்டு வெச்சிடுவார்

==========

2. மாமூல் தரமுடியாது உங்களால முடிஞ்சதைப் பாருங்க

என்கிட்டே அப்படிச் சொல்லாதே பக்கிரி.. . ஏன்னா எனக்கும் சாராயம் காய்ச்சத் தெரியும். நான் ஆரம்பிச்சா அப்புறம் உன் தொழில் படுத்துடும்.. . பார்த்துக்க

==========

3. என்னது.. . கம்ப்யூட்டர் கிளி ஜோசியமா ?

ஆமா.. . உங்க ராசிக்கு ஏத்த மாதிரி, கிளி எடுத்துக்கொடுக்கற சி.டி.யை கம்ப்யூட்டர்ல போட்டுப் படிச்சுக் காமிப்போம்

==========

4. தினமும் நாய் துரத்திட்டு வர்ற மாதிரி கனவு வருதுனு சொல்லி டாக்டர்கிட்டே போனீங்களே.. . மருந்து கொடுத்தாரா ?

இல்லை.. . ரெண்டு மூணு கல்லைக் கொடுத்து கையில வெச்சிட்டே தூங்கச் சொன்னாரு

==========

5. அந்த டாக்டர்கிட்டே இருக்கிற பணமெல்லாம் நேர்வழில சம்பாதிச்ச பணம் இல்லை

பின்ன எப்படி ?

எல்லாம் பைபாஸ் ஆபரேஷன் பண்ணி சம்பாதிச்சது

==========

6. தன் மகனைத் தரதரவென்று இழுத்துக் கொண்டுபோய், கணவன்முன் நிறுத்தினாள் அவள்.

“உங்க பையன்கிட்டே கொஞ்சம் பேசுங்க.. . நான் சொல்ற எதையுமே கேக்கமாட்டேங்கிறான்”

பையன் பக்கம் திரும்பிய அப்பா, ரொம்ப கோபமாக சொன்னார். எவ்வளவு திமிர் இருந்தா உங்க அம்மா பேச்சையே மதிக்காம இருப்பே ? மனசுல என்னைவிடப் பெரிய ஆளுன்னு நினைப்பா

?

==========

7. நம்ம கேப்டனுக்கு சாப்பிட ஏன் நிறைய வாழைப்பழம் கொடுக்கறாங்க ?

டாஸ் போட்ட நாணயத்தை அண்ணாந்து பார்த்திருக்கார்.. . அது வயித்துக்குள்ளே போயிடுச்சாம்.


இன்றைய மினி பிட்டு ஜோக்கு:

8. உங்க அப்பா ரொம்பவும் அல்பம்டி!

ஏங்க அப்படிச் சொல்றீங்க ?

விவஸ்தையே இல்லாம அறுபதாம் கல்யாணம் முடிஞ்சதும் சாந்தி முகூர்த்ததுக்கும் ஏற்பாடு பண்ணுங்கங்கன்றாரே!

No comments:

Post a Comment