Saturday, October 3, 2009

பிட்டு - 67

1. என்ன உன் கணவர் தூக்கத்துல ஹலோ ஹலோன்னு டெலிபோன்ல பேசறா மாதிரி பேசறாரு ?

நான்தான் சொன்னேனே அவருக்கு தூக்கத்துல கால் போடற பழக்கம் இருக்குதுன்னு.

==========

2. ஜெயிலர் வேலை கேட்கறியே.. . உனக்கு முன் அனுபவம் ஏதாவது இருக்கா ?

ஆறு வருஷம் ஜெயில்ல இருந்திருக்கேன் சார்

==========

3. உங்க பொண்ணுக்கு பார்த்த டாக்டர் மாப்பிள்ளையை ஏன் வேண்டாம்னுட்டீங்க. வரதட்சனை அதிகமா கேட்டாரா ?

அது கேட்டால்தான் குடுத்துடலாமே. ஆனா வரதட்சணை வேண்டாம். தினசரி 4 நோயாளிகள் மட்டும் பிடிச்சுக் குடுங்கங்கறாரு. நடக்குற காரியமா இது.

==========

4. மாமியார் பேசும்போது ஏன் ஊசி - நூலோட நிக்கறே ?

வாய் கிழியப் பேசுவாங்களே

==========

5. அப்பா.. . உங்களுக்குத் துக்கத்தைத் தாங்கிக்கிற சக்தி இருக்கா ?

ஏண்டா அப்படிக் கேக்கறே ?

நான் பரீட்சையில ஃபெயிலாட்டேம்பா

==========

6. செவ்வாய் கிரகத்துல தண்ணீ இருக்காமே .. .?

தண்ணீ இருக்கு சரி தொட்டுக்க ஊறுகாய் இருக்கா .. .?

==========

7. குங்ஃபு பண்ணும்போது வெளவ் வெளவ்-னு சப்தம் எழுப்பினது தப்பா போச்சி

ஏன் ?

பிளாக் பெல்டுக்குப் பதிலா நாய் பெல்ட்டைக் கொடுத்துட்டாங்க

==========


இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:


8. ஏரியா தாதாவோட மகளைக் கட்டினது தப்பாப் போச்சுடா!

ஏன் ?

ஜாக்கெட்ல கைய மடிச்சு விட்டுக்கறா!

No comments:

Post a Comment