Saturday, October 3, 2009

பிட்டு - 67

1. வைர வியாபாரி தன் பையனை எப்படி திட்டுவார் ?

வாயாலதான்

தப்பு, தப்பு. "டெய் மண்டு" ன்னு திட்டுவார்.

==========

2. ஒரு மனைவியை வெச்சுண்டு காலம் தள்ளறதே கஷ்டமா இருக்கு.. . ஆனா நீங்க மூணு மனைவிங்களை வெச்சுக்கிட்டு ஈசியா காலம் தள்றீங்களே எப்படி ?

ஒரு மனைவி இருந்தா நம்மோட சண்டை போடுவா. மூணு மனைவி இருந்தா அவங்களுக்குள்ளேயே அடிச்சுப்பாங்க.. . நாம ஈசியா காலம் தள்ளலாம்

==========

3. ஊர்ல எல்லாரும் சவுக்கியமா ?

விளையாடறீங்களா ? எங்க ஊர்ல 12,435 பேர் இருக்காங்க. யார் யார் சவுக்கியம்னு எனக்கெப்படி தெரியும் ?

==========

4. பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க

எப்படி ?

கல்யாணம் முடிஞ்சதும் அவ படிச்சது கல்கி, குமுதம்-னு சொல்றாங்க

==========

5. வயசான மனிதர் ஒருத்தர் சாகும் நிலையில் இருந்தார் அவர் தன்னோட குடும்ப டாக்டர், வக்கீல், பாதிரியார் மூணு பேரையும் கூப்பிட்டார். ”என்னோட மொத்த சொத்து மூணு லட்சம்

ரூபாய், இதை யாருக்கும் தர எனக்கு இஷ்டம் இல்லை. இந்தப் பணத்தை என்னோடவே கொண்டு போகணும்-னு ஆசைப்படறேன். இதை உங்க மூணு பேரிடமும் ஆளுக்கு ஒரு லட்சமா

தர்றேன். நான் செத்ததும் என் சவப்பெட்டியில் இந்தப் பணத்தையும் போட்டுப் புதைச்சிடுங்க”-னு குடுத்துட்டு கொஞ்சநாள்ல அவர் செத்துப் போய்ட்டார்.

அவரது சவப்பெட்டியில் மூணு பேரும் ஆளுக்கொரு கவரைப் போட்டாங்க. கொஞ்ச நேரம் கழித்துப் பாதிரியார் அழுதுக்கிட்டே, ”நான் எழுபதாயிரம் ரூபாய்தான் போட்டேன். ஒரு அநாதை

குழந்தையோட கல்விக்காக அதிலிருந்து முப்பதாயிரம் ரூபாயை எடுத்துட்டேன்” னு குற்றவுணர்வோடு சொன்னார்.

இதைக் கேட்டதும் டாக்டரும் “நான் நாற்பதாயிரம் ரூபாய்தான் போட்டேன். மருத்துவமனையில் ஒரு மெஷின் வாங்கறதுக்காக அறுபதாயிரம் ரூபாயை எடுத்துட்டேன். நான் பாவி”-னு

ரொம்ப அழுதார். அதைக் கேட்டுட்டிருந்த வக்கீலுக்குக் கோபம் வந்தது. ”ச்சே நான் உங்களை மாதிரி ஏமாத்து ஆசாமி கிடையாது. சுளையா ஒரு லட்சம் ரூபாய்க்கு செக் எழுதி அந்த

சவப்பெட்டிக்குள்ள போட்டுட்டேன்னார்”

==========

6. ஒரு வக்கீலிடம் ”நீங்க ரொம்ப காஸ்ட்லி வக்கீல் .. .. ஒரு கேள்விக்கு ஆயிரம் ரூபாய் வாங்குவீங்கன்னு கேள்விப்பட்டேன். நான் ரெண்டாயிரம் ரூபாய் தரேன். என்னோட ரெண்டு

கேள்விகளுக்கு பதில் சொல்வீங்களா” ?-னு கேட்டான் ஒருத்தன்.

”நிச்சயமா .. .. சரி .. .. உங்க ரெண்டாவது கேள்வி என்ன” ?-னு கேட்டார் வக்கீல்.

==========

7. மரணப் படுக்கையிலிருந்த கணவன், தன் மனைவியிடம் ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லிக்கொண்டிருந்தான். ”உனக்குத் தெரியுமா. என்னோட எல்லா கஷ்ட காலங்கள்லயும் நீ என்

கூடவே இருந்திருக்கே. நான் ஒரு விபத்துல சிக்கினப்ப கூடவே இருந்து கவனிச்சுக்கிட்டே என்னோட பிஸினஸ் நொடிச்சுப் போனப்ப தைரியம் சொன்னது நீதான். உடம்பு மோசமாகி.

ஏழெட்டு மாசமா கோமாவுல இருந்தப்பவும் கூடவே இருந்து பார்த்துக் கிட்டது நீதான். இதையெல்லாம் நினைச்சுப் பார்க்கறப்போ .. ..”

”எமோஷனலாகாதீங்க .. .. என் கடமையைத்தானே செஞ்சேன்” கண்ணீர் உகுத்தாள் மனைவி.

பொருட்படுத்தாமல் கணவன் சொன்னான் - ”குறுக்கே பேசாதடி சனியனே. .. நீதான் எனக்கு எல்லா துரதிர்ஷ்டத்தையும் கொண்டுவந்திருக்கே”

==========


இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:


8. ரெண்டு பெண்கள் பேசிட்டு இருந்தாங்க. ”என் கணவர் தினமும் ராத்திரி லேட்டா தான் வீட்டுக்கு வர்றார். என்ன பண்றதுன்னே தெரியலே” னு சொன்னா முதல் பெண். அதுக்கு

ரெண்டாவது பெண் “என் கணவர் கூட லேட்டாதான் வந்திட்டிருந்தார். இப்பல்லாம் ஆபீஸ் அஞ்சு மணிக்கு விட்டா, டாண்ணு அஞ்சரைக்கு வீட்டில் இருக்கிறார்” ன்னா முதல் பெண்ணுக்கு

செம ஆச்சரியம் ”அப்படி என்னதான் பண்ணினே ?”-னு கேட்டா.

”ஒரு நாள் வழக்கம் போல அவர் லேட்டா வந்தார். நான் தூக்கக் கலக்கத்துல வேணும்னே, யாரு .. .. முரளியா ?-னு கேட்டேன். அவளோ தான் என்னோட ட்ரீட்மெண்ட்” னு சொன்னா

ரெண்டாவது பெண்.

முதல் பெண் ”புரியலையே இதுல அப்படி என்ன இருக்கு ?” -னு கேட்டதுக்கு ரெண்டாவது பெண் சொன்னாள் ” வேறொண்ணும் இல்லை. என் கணவரோட பெயர் முரளி கிடையாது .. .கார்த்திக்”

பிட்டு - 67

1. எப்போ பார்த்தாலும் எல்லா நகையையும் போட்டுக்கிட்டு இருக்கியே, ஏன்?

எல்லாம் என் புருஷனுக்காகத்தான்

நகையோடதான் இருக்கணும்னு சொல்லுவாரா ?

நீ வேற. .. வீட்ல வெச்சிருந்தா அவர் அடகுக் கடையில கொண்டு வெச்சிடுவார்

==========

2. மாமூல் தரமுடியாது உங்களால முடிஞ்சதைப் பாருங்க

என்கிட்டே அப்படிச் சொல்லாதே பக்கிரி.. . ஏன்னா எனக்கும் சாராயம் காய்ச்சத் தெரியும். நான் ஆரம்பிச்சா அப்புறம் உன் தொழில் படுத்துடும்.. . பார்த்துக்க

==========

3. என்னது.. . கம்ப்யூட்டர் கிளி ஜோசியமா ?

ஆமா.. . உங்க ராசிக்கு ஏத்த மாதிரி, கிளி எடுத்துக்கொடுக்கற சி.டி.யை கம்ப்யூட்டர்ல போட்டுப் படிச்சுக் காமிப்போம்

==========

4. தினமும் நாய் துரத்திட்டு வர்ற மாதிரி கனவு வருதுனு சொல்லி டாக்டர்கிட்டே போனீங்களே.. . மருந்து கொடுத்தாரா ?

இல்லை.. . ரெண்டு மூணு கல்லைக் கொடுத்து கையில வெச்சிட்டே தூங்கச் சொன்னாரு

==========

5. அந்த டாக்டர்கிட்டே இருக்கிற பணமெல்லாம் நேர்வழில சம்பாதிச்ச பணம் இல்லை

பின்ன எப்படி ?

எல்லாம் பைபாஸ் ஆபரேஷன் பண்ணி சம்பாதிச்சது

==========

6. தன் மகனைத் தரதரவென்று இழுத்துக் கொண்டுபோய், கணவன்முன் நிறுத்தினாள் அவள்.

“உங்க பையன்கிட்டே கொஞ்சம் பேசுங்க.. . நான் சொல்ற எதையுமே கேக்கமாட்டேங்கிறான்”

பையன் பக்கம் திரும்பிய அப்பா, ரொம்ப கோபமாக சொன்னார். எவ்வளவு திமிர் இருந்தா உங்க அம்மா பேச்சையே மதிக்காம இருப்பே ? மனசுல என்னைவிடப் பெரிய ஆளுன்னு நினைப்பா

?

==========

7. நம்ம கேப்டனுக்கு சாப்பிட ஏன் நிறைய வாழைப்பழம் கொடுக்கறாங்க ?

டாஸ் போட்ட நாணயத்தை அண்ணாந்து பார்த்திருக்கார்.. . அது வயித்துக்குள்ளே போயிடுச்சாம்.


இன்றைய மினி பிட்டு ஜோக்கு:

8. உங்க அப்பா ரொம்பவும் அல்பம்டி!

ஏங்க அப்படிச் சொல்றீங்க ?

விவஸ்தையே இல்லாம அறுபதாம் கல்யாணம் முடிஞ்சதும் சாந்தி முகூர்த்ததுக்கும் ஏற்பாடு பண்ணுங்கங்கன்றாரே!

பிட்டு - 67

1. என்ன உன் கணவர் தூக்கத்துல ஹலோ ஹலோன்னு டெலிபோன்ல பேசறா மாதிரி பேசறாரு ?

நான்தான் சொன்னேனே அவருக்கு தூக்கத்துல கால் போடற பழக்கம் இருக்குதுன்னு.

==========

2. ஜெயிலர் வேலை கேட்கறியே.. . உனக்கு முன் அனுபவம் ஏதாவது இருக்கா ?

ஆறு வருஷம் ஜெயில்ல இருந்திருக்கேன் சார்

==========

3. உங்க பொண்ணுக்கு பார்த்த டாக்டர் மாப்பிள்ளையை ஏன் வேண்டாம்னுட்டீங்க. வரதட்சனை அதிகமா கேட்டாரா ?

அது கேட்டால்தான் குடுத்துடலாமே. ஆனா வரதட்சணை வேண்டாம். தினசரி 4 நோயாளிகள் மட்டும் பிடிச்சுக் குடுங்கங்கறாரு. நடக்குற காரியமா இது.

==========

4. மாமியார் பேசும்போது ஏன் ஊசி - நூலோட நிக்கறே ?

வாய் கிழியப் பேசுவாங்களே

==========

5. அப்பா.. . உங்களுக்குத் துக்கத்தைத் தாங்கிக்கிற சக்தி இருக்கா ?

ஏண்டா அப்படிக் கேக்கறே ?

நான் பரீட்சையில ஃபெயிலாட்டேம்பா

==========

6. செவ்வாய் கிரகத்துல தண்ணீ இருக்காமே .. .?

தண்ணீ இருக்கு சரி தொட்டுக்க ஊறுகாய் இருக்கா .. .?

==========

7. குங்ஃபு பண்ணும்போது வெளவ் வெளவ்-னு சப்தம் எழுப்பினது தப்பா போச்சி

ஏன் ?

பிளாக் பெல்டுக்குப் பதிலா நாய் பெல்ட்டைக் கொடுத்துட்டாங்க

==========


இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:


8. ஏரியா தாதாவோட மகளைக் கட்டினது தப்பாப் போச்சுடா!

ஏன் ?

ஜாக்கெட்ல கைய மடிச்சு விட்டுக்கறா!

பிட்டு - 67

1. கோமா ஸ்டேஜ்ல இருக்கற தலைவருக்கு நினைவு திரும்புமா ?

கீழே சில்லறை விழற சத்தம் கேட்டா மட்டும் காது துடிக்குது, மற்றபடி ஒரு முன்னேற்றமும் இல்லை

==========

2. பஸ்ஸில் உன் பக்கத்தில் அழகான இளம்பெண் உட்கார்ந்ததுக்காக சந்தோஷப்படாமல் ஏன் வருத்தப் படறீங்க ?

எப்படி சந்தோஷப்பட முடியும் ? வயசுப் பொண்ணு கூச்சமில்லாம நம்ம பக்கத்துல உட்கார்ந்தா என்ன அர்த்தம் ? நம்மை வயசானவனா நினைக்கிறாள்னு தானே அர்த்தம்

==========

3. ”அம்மா, கல்யாணப் பொண்ணுக்கு மட்டும் ஏன் வெள்ளை டிரஸ் போடறாங்க ?” ஒரு திருமண விழாவில் கலந்துகொள்ள அம்மாவுடன் சர்ச்சுக்குப் போன சுட்டிப் பெண் கேட்டாள்.

”ஏன்னா, வெள்ளை நிறம்தான் சந்தோஷத்தின் அடையாளம். தவிர, இன்னிக்குத்தான் அந்தப் பெண்ணோட வாழ்க்கையில் சந்தோஷமான நாள்.. .”

அம்மா பதில் சொல்லி முடிக்கும் முன்பே அடுத்த கேள்வி வந்தது. ”சரி.. . கல்யாண மாப்பிள்ளைக்கும் மட்டும் கறுப்பு ஸூட் போடறாங்களே .. . அது ஏன் ?” அம்மா வாயடைத்துப்

போனாள்.

==========

4. மவுண்ட் ரோட்டுல எருமை மாடு திடீர்னு ஓடிவந்துடுச்சு

ஐயையோ .. .

அப்புறம்.. .?

டிராபிக் போலீஸ்காரர் பார்த்துட்டு, மாட்டுக்கிட்டே பாலையும் மாட்டுக்காரன்கிட்டே பணத்தையும் கறந்துட்டாரு.

==========

5. ஆடி மாசம் பிறந்ததுக்கு உன் கணவர் ஏன் அவங்க அம்மா வீட்டுக்குப் போய்ட்டாரு ?

பின்ன அவருதான் என் விட்டோ மாப்பிள்ளையாச்சே.

==========

6. இன்னிக்கு அவருக்கு ஓசிப் பத்திரிகை கிடைக்கலையா ?

ஏன் ?

பத்திரிகை தர்மமே இல்லாமப் போச்சுன்னு புலம்பிக்கிட்டுப் போறhரே.. .

==========

7. நான் சொல்ல வேண்டிய விஷயத்தை மத்தவங்ககிட்டே சொல்லும் போது வேற எதையே சொல்லிடறேன் டாக்டர்

இதுதான் உங்க பிரச்சினையா ?

அது இல்லை, வேற ஏதோ டாக்டர்

==========


அப்புறம் கடைசியா இன்றைய மினி பிட்டு ஜோக்கு:


8. நான் நினைப்பேன்.. . அவர் கொடுத்துடுவார்.. .

என்ன ?

முத்தம்தான்.. .

மேட்ஃபார் ”இச்” அதர்-னு சொல்லு